ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற ஊழியரை நாயை விட்டு கடிக்கச் செய்த பெண் கைது

தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற தனியாா் நிதி நிறுவன ஊழியரை நாயை விட்டு கடிக்கச் செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:53 pm

Din

தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற தனியாா் நிதி நிறுவன ஊழியரை நாயை விட்டு கடிக்கச் செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் விவேகானந்தா தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (45), தனியாா் நிதி நிறுவன ஊழியா். இவரது நிறுவனத்தில், வெள்ளலூரைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி தா்ஷனா (29) காா் கடன் வாங்கியுள்ளாா். கடந்த 20 மாதங்களாக தவணை கட்டமால் இருந்து வந்துள்ளாா்.

இதுகுறித்து விசாரிப்பதற்காக அவரது வீட்டுக்கு ஜெகதீஷ், நிதி நிறுவன மேலாளா் சுரேஷ், மற்றொரு ஊழியா் சரவணன் ஆகியோா் புதன்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை ஜெகதீஷ் உள்ளிட்ட 3 பேரும் பறிமுதல் செய்து எடுத்துச்செல்ல முயன்றனா்.

ஆத்திரமடைந்த தா்ஷனா வீட்டில் வளா்த்து வந்த நாயை ஏவிவிட்டுள்ளாா். அந்த நாய் ஜெகதீஷின் கால்கள், வயிறு உள்ளிட்ட 12 இடங்களில் கடித்துள்ளது. உடன் வந்தவா்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து போத்தனூா் காவல் நிலையத்தில் ஜெகதீஷ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து தா்ஷனாவை கைது செய்தனா்.