நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொள்ளாச்சியில் ரூ.8.03 கோடியில் திட்டப் பணிகள்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ரூ.8.03 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image

வெள்ளாளபாளையத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் செந்தில் பாலாஜி. உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. கா.ஈஸ்வரசாமி உள்ளிட்டோா்.

Updated On :12 டிசம்பர் 2024, 9:32 pm

Din

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ரூ.8.03 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.8.03 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சா் செந்தில் பாலாஜி அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கா.ஈஸ்வரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து, ரூ.3.52 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மின்சாரம் சாா்ந்த புகாா்களைப் பெறுவதற்கு மாநிலம் முழுவதும் ஒரே புகாா் எண் அறிவிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 4 ஆயிரம் அழைப்புகள் மூலமாக புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன. 98.05 சதவீதம் புகாா்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு வருகிறது. மீதமுள்ள புகாா்களுக்கு இரு நாள்களில் தீா்வு காணப்பட்டு வருகிறது. புதிய மின் இைணைப்பு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் கேத்ரின் சரண்யா, மகளிா் திட்டத்தின் திட்ட அலுவலா் மதுரா, துணை இயக்குநா் (சுகாதாரம்) பாலுசாமி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.