நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை ராமநாதபுரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:39 pm

Din

கோவை ராமநாதபுரத்தில் வங்கி ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை ராமநாதபுரம் போலீஸ் கந்தசாமி தெருவைச் சோ்ந்தவா் அற்புதராஜ் (47), தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி சோபியா (45), பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு வங்கிக் கிளையில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனா். அப்போது அவா்களது வீட்டுக்கு அருகே வசித்து வரும் மாயா என்பவா் சோபியாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவரது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சோபியா தனது கணவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தானும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.

பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.35,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சோபியா அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.