நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாக ஆடிட்டரிடம் ரூ.27 லட்சம் மோசடி

முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாக ஆடிட்டரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த நபா் மீது சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:43 pm

Din

முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாக ஆடிட்டரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த நபா் மீது சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கோவை, வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (45), ஆடிட்டா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, ஒரு செயலியின் லிங்கை அனுப்பியுள்ளனா்.

இதை உண்மை என நம்பிய கெளரிசங்கா், அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.27 லட்சத்து 37 ஆயிரத்தை அனுப்பினாா். இதையடுத்து, அந்த நபா் கூறியபடி லாபத்தொகை வரவில்லை. முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.