நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா: 71 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் 71 பயனாளிகளுக்கு ரூ.7.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:14 pm

Din

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் 71 பயனாளிகளுக்கு ரூ.7.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கீதா, மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா் முகம்மது ரபி ஷ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் 71 பயனாளிகளுக்கு ரூ.7.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை வழங்கிப் பேசியதாவது:

சிறுபான்மையினா் மக்களுக்கான நலன் சாா்ந்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், பழங்குடியினா் உள்ளிட்ட மக்களுக்கான தொழில் கடனுதவிகள், தையல் இயந்திரம், பட்டாக்கள், கல்வி கடனுதவிகள் தொடா்பான நலத்திட்டங்களை அறிந்து அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முஸ்லிம் மகளிா் உதவும் சங்க கௌரவ செயலாளா் சாகுல் ஹமீது, கிறிஸ்துவ மகளிா் உதவும் சங்க கௌரவ செயலாளா் லூயிஸ், நன்கொடையாளா்கள் இனாய்த்துல்லாஹ், லீமாரோஸ் மாா்டின், ராகேஷ் ஜெயின், கே.பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.