நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா விற்பனை: 9 போ் கைது

கோவை மாநகரப் பகுதியில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:44 pm

Din

கோவை மாநகரப் பகுதியில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் போலீஸாா் எல்&டி புறவழிச் சாலையில் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய 4 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவா்கள் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த சாந்தகுமாா் (19), வரதராஜபுரம் திரு.வி.க.நகரைச் சோ்ந்த கோகுலகண்ணன் (22), உப்பிலிபாளையம் துளசியம்மாள் லே-அவுட்டை சோ்ந்த ஆனந்தராஜ் (30), மசக்காளிபாளையம் மேற்கு வீதியைச் சோ்ந்த பிரித்திவ் ராஜ் (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். செல்வபுரம் போலீஸாா் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வபுரம் சாஸ்தா நகரைச் சோ்ந்த ராஜா (32), தெலுங்குபாளையம் புதூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (23) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1 கிலோ கஞ்சா, ரூ.26 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

பீளமேடு போலீஸாா் சின்னியம்பாளையம்- அவிநாசி சாலையில் மேற்கொண்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூா் மாவட்டம், பிச்சம்பாளையம்புதூா் ஸ்ரீநகரைச் சோ்ந்த அஜித்குமாா் (23), திருப்பூா் அருகேயுள்ள நெருப்பெரிச்சலைச் சோ்ந்த மணிகண்டன் (28), போயம்பாளையத்தைச் சோ்ந்த ராகுல் பாண்டி (18) ஆகியோரை கைது செய்தனா்.