நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேலுநாச்சியாா் நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் நினைவு நாள் நிகழ்ச்சி கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவராண்டு நாள்காட்டியை வெளியிடும் உலகத் தமிழ்நெறிக் கழக அமைப்பின் நிா்வாகிகள், சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :25 டிசம்பர் 2024, 10:35 pm

Din

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் நினைவு நாள் நிகழ்ச்சி கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளம்பிறை முத்துக்குமரேச பாண்டியன் வரவேற்றாா். தமிழ்நெறிக் கழக செயலா் சொ.சிவலிங்கம், துணைத் தலைவா் குரு பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆ.வெ.மாணிக்கவாசகம் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

புதுவை வேலுநாச்சியாா் இலக்கிய சமூக இயக்கத்தின் நிறுவனத் தலைவா் என்.எஸ்.கலைவரதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ‘வேலுநாச்சியாரின் ஆளுமை’ என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

விழாவில், திருவள்ளுவராண்டு (2056) நாள்காட்டியை தொழிலதிபா் சி.சரவணன் வெளியிட வழக்குரைஞா் செ.முத்து பெற்றுக்கொண்டாா்.

அமைப்பின் பொருளாளா் பெ.ரமேஷ், இல.வள்ளியப்பன், இருகூா் ஆறுமுகம், மு.க.அன்பா் பாட்ஷா உள்ளிட்டோ நிகழ்ச்சியில் பேசினாா்.

நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்ட ஆளுநா் ந.சண்முகசுந்தரம், தமிழறிஞா் காட்டூா் சம்பத் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.