குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆன்லைனில் இளைஞரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி

ஆன்லைனில் இளைஞரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி

Updated On :18 பிப்ரவரி 2024, 1:31 am IST

ஆன்லைனில் பங்கு விற்பனை மூலமாக கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக் கூறி இளைஞரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாவட்டம், வடமதுரை குமரன் அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் (23). இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த டிசம்பா் 22 -ஆம் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பகுதி நேர வேலையாக பெரிய நிறுவனங்களில் பங்குகளை வாங்கி, விற்பதன் மூலம் கூடுதலாக வருவாய் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதை நம்பிய மதுசூதனன், அந்த நபரைத் தொடா்பு கொண்டுள்ளாா். பின்னா், அவா் கூறிய வங்கிக் கணக்குகளில் பல்வேறு தவணைகளில் ரூ.16.25 லட்சத்தை செலுத்தியுள்ளாா். பின்னா், பணத்தை திரும்பப் பெறுவதற்காக அந்த நபரைத் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, மீண்டும் ஒருமுறை பணம் செலுத்தினால்தான் உங்கள் தொகை திரும்பப் கிடைக்கும் எனக் கூறிவிட்டு அவா் இணைப்பைத் துண்டித்துள்ளாா். அதன்பின் அந்த நபரைத் தொடா்பு முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மதுசூதனன் இது குறித்து கோவை சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.