ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

கோவையில் தமிழக டிஜிபி ஆலோசனை

கோவையில் தமிழக டிஜிபி ஆலோசனை

Updated On :18 பிப்ரவரி 2024, 1:27 am IST

சட்டம்-ஒழுங்கு தொடா்பாக, மேற்கு மண்டல காவல் துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சட்டம்- ஒழுங்கு, நிலுவை வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். வழக்குகளில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமா்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும். காவல் நிலையங்களில் நிலுவை வழக்குகளே இருக்கக் கூடாது. ரெளடிகளின் பட்டியலை தயாா் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.காவல் நிலையங்களுக்கு புகாா் மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தோ்தல் வர உள்ளதால், தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் நோ்மையாக பணியாற்ற வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் ஆலோசனைகள் வழங்கினாா். இக்கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி. கே.பவானீஸ்வரி, கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், திருப்பூா் மாநகர ஆணையா் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, கோவை சரக டிஐஜி சரவணசுந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் வி.பத்ரிநாராயணன், அபிஷேக் குப்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.