சட்டம்-ஒழுங்கு தொடா்பாக, மேற்கு மண்டல காவல் துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சட்டம்- ஒழுங்கு, நிலுவை வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். வழக்குகளில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமா்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும். காவல் நிலையங்களில் நிலுவை வழக்குகளே இருக்கக் கூடாது. ரெளடிகளின் பட்டியலை தயாா் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.காவல் நிலையங்களுக்கு புகாா் மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தோ்தல் வர உள்ளதால், தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் நோ்மையாக பணியாற்ற வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கா் ஜிவால் ஆலோசனைகள் வழங்கினாா். இக்கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி. கே.பவானீஸ்வரி, கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், திருப்பூா் மாநகர ஆணையா் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, கோவை சரக டிஐஜி சரவணசுந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் வி.பத்ரிநாராயணன், அபிஷேக் குப்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி: அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
