நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 78 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 78 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:27 am IST

ஷாா்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 78 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவையில் இருந்து புதுதில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஷாா்ஜாவில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு கடந்த 15-ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஷாா்ஜாவில் இருந்து கோவை வந்த ஏா் அரேபியா விமான பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த இளைஞரைத் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. அவா் கொண்டு வந்த வேக்கியூம் கிளீனரை எடுத்து சோதனை செய்தபோது அதற்குள் 78 பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.39 லட்சத்து 77, 688 எனக் கூறப்படுகிறது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.