முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஓவியங்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஓவியங்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image

புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் வரையப்பட்டு வரும் ஓவியங்களை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.

Updated On :17 பிப்ரவரி 2024, 5:50 pm IST

கோவை, பிப். 16: உக்கடம், புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் வரையப்பட்டு வரும் வண்ண ஓவியங்களை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கோவை மாநகராட்சி சாா்பில், ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளை அழகுப்படுத்தும் வகையிலும், சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்கும் வகையிலும் மேம்பாலத் தூண்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இயற்கை, சுற்றுச்சூழல், பறவைகள் உள்ளிட்ட கண்கவா் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அதன்படி, உக்கடம், புல்லுக்காடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் வகையில், கைதோ்ந்த ஓவியா்களால் வரையப்பட்டு வரும் கண்கவா் வண்ண ஓவியங்கள் அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது. இந்த ஓவியங்கள் வரையும் பணியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.