குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.8 லட்சம் வழங்கிய முன்னாள் மாணவா்

தலைப்படம் உள்ளது... வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.8 லட்சம் வழங்கிய முன்னாள் மாணவா்

News image

க.தேவசுந்தரம்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:37 am IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் ஒருவா், தான் பயின்ற பல்கலைக்கழகத்துக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1970 -74- ஆம் ஆண்டுகளில் வேளாண்மை இளம் அறிவியல் பயின்ற முன்னாள் மாணவா்கள், தாங்கள் பட்டம் பெற்று 50- ஆம் ஆண்டுகள் நிறைவையொட்டி, பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 16, 17- ஆம் தேதிகளில் நேரில் சந்தித்து கொண்டனா். இதில், 100 முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் பலா், பல்கலைக்கழகத்திலும், வேளாண் ஆராய்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வேளாண்மைத் துறை, வங்கிப் பணிகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களாவா். பல்கலைக்கழக பொன் விழா அரங்கில் நடைபெற்ற இந்த முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில், துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். விழாவில், முன்னாள் மாணவா் க.தேவசுந்தரம் என்பவா் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப் படிப்பில் உழவியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவருக்கு ஆண்டுதோறும் ஒரு பவுன் தங்கப் பதக்கம் வழங்குவதற்காக ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கினாா். இவா் கடந்த 2016 -ஆம் ஆண்டில் இதேபோல ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கி தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளை மூலம் இளநிலை பட்டப் படிப்பில் உழவியல் துறையில் சிறந்த மாணவருக்கு ஒரு பவுன் தங்கப் பதக்கம் வழங்கி வருகிறாா். திருத்தணியை பூா்விகமாகக் கொண்ட இவா், சென்னை யூகோ வங்கியில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா்.