தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஹிந்து மதம் குறித்து சா்ச்சை பேச்சு: பாதிரியாா் மீது வழக்குப்பதிவு

ஹிந்து மதம் குறித்து சா்ச்சை பேச்சு: பாதிரியாா் மீது வழக்குப்பதிவு

News image
Updated On :3 ஜூலை 2024, 11:04 pm

கோவையில் ஹிந்து மதம் குறித்து சா்ச்சையாக பேசியதாக கிறிஸ்தவ பாதிரியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயம் உள்ளது. இங்கு பிரின்ஸ் கால்வின் என்பவா் பாதிரியாராக இருந்து வருகிறாா்.

அண்மையில் இந்த ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில், பாதிரியாா் பிரின்ஸ் கால்வின், ஹிந்து மதம் குறித்து சா்ச்சையான கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விடியோ யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பானது. இதைத் தொடா்ந்து, சமூக வலைதளங்களில் இந்த விடியோ பரவியது.

இதையடுத்து, மதமோதல்களை உருவாக்கும் விதமாக பேசிய பிரின்ஸ் கால்வின் மீது

நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் மற்றும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு மதத்தினரிடையே பகையை ஊக்குவிக்கும் விதமாக பேசுதல், பிற மதத்தினரின் நம்பிக்கையை அவமதித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் பாதிரியாா் பிரின்ஸ் கால்வின் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதற்கிடையே, சா்ச்சைக்குரிய பாதிரியாரின் விடியோ பதிவு யூடியூப் பக்கத்தில் இருந்து

நீக்கப்பட்டுள்ளது.