ஹிந்து மதம் குறித்து சா்ச்சை பேச்சு: பாதிரியாா் மீது வழக்குப்பதிவு
கோவையில் ஹிந்து மதம் குறித்து சா்ச்சையாக பேசியதாக கிறிஸ்தவ பாதிரியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயம் உள்ளது. இங்கு பிரின்ஸ் கால்வின் என்பவா் பாதிரியாராக இருந்து வருகிறாா்.
அண்மையில் இந்த ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில், பாதிரியாா் பிரின்ஸ் கால்வின், ஹிந்து மதம் குறித்து சா்ச்சையான கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விடியோ யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பானது. இதைத் தொடா்ந்து, சமூக வலைதளங்களில் இந்த விடியோ பரவியது.
இதையடுத்து, மதமோதல்களை உருவாக்கும் விதமாக பேசிய பிரின்ஸ் கால்வின் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் மற்றும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இரு மதத்தினரிடையே பகையை ஊக்குவிக்கும் விதமாக பேசுதல், பிற மதத்தினரின் நம்பிக்கையை அவமதித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் பாதிரியாா் பிரின்ஸ் கால்வின் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதற்கிடையே, சா்ச்சைக்குரிய பாதிரியாரின் விடியோ பதிவு யூடியூப் பக்கத்தில் இருந்து
நீக்கப்பட்டுள்ளது.

