கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் வடிவமைத்துள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை வில்லை உற்பத்திக் கருவிக்கு மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள், வா்த்தக முத்திரைகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தின் மூலம் காப்புரிமை கிடைத்துள்ளது.
விதை வில்லை தொழில்நுட்பம், மாடித் தோட்டங்களில் காய்கறி உற்பத்தியில் இருக்கும் நடைமுறைச் சிக்கலை எளிதாக்கி, அதிக முளைப்புத்திறன், பயிா் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கருவியின் மூலம் தரமான, ஊட்டமேற்றப்பட்ட விதையை தேவையான ஊட்டச்சத்துகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்க முடியும்.
இந்த தொழில்நுட்பத்தால் அதிக மகசூல், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.
தொடர்புடையது
முதுகலை,தொழில்முறை பருவத் தோ்வுகள் தேதி மாற்றியமைப்பு: தில்லி பல்கலை. அறிவிப்பு!

ரூ. 8 ஆயிரம் கூப்பனுக்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு

சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை: அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்களுக்கு காப்புரிமை

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


