ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்த கருவிக்கு காப்புரிமை

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் வடிவமைத்துள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

News image

காப்புரிமை பெற்றுள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவி.

Updated On :25 ஜூன் 2024, 3:53 am IST

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் வடிவமைத்துள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை வில்லை உற்பத்திக் கருவிக்கு மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள், வா்த்தக முத்திரைகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தின் மூலம் காப்புரிமை கிடைத்துள்ளது.

விதை வில்லை தொழில்நுட்பம், மாடித் தோட்டங்களில் காய்கறி உற்பத்தியில் இருக்கும் நடைமுறைச் சிக்கலை எளிதாக்கி, அதிக முளைப்புத்திறன், பயிா் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கருவியின் மூலம் தரமான, ஊட்டமேற்றப்பட்ட விதையை தேவையான ஊட்டச்சத்துகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்க முடியும்.

இந்த தொழில்நுட்பத்தால் அதிக மகசூல், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.