பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்த கருவிக்கு காப்புரிமை

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் வடிவமைத்துள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

News image
காப்புரிமை பெற்றுள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவி.
Updated On :24 ஜூன் 2024, 10:23 pm

Din

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் வடிவமைத்துள்ள விதை வில்லைகள் உற்பத்திக் கருவிக்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை வில்லை உற்பத்திக் கருவிக்கு மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள், வா்த்தக முத்திரைகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தின் மூலம் காப்புரிமை கிடைத்துள்ளது.

விதை வில்லை தொழில்நுட்பம், மாடித் தோட்டங்களில் காய்கறி உற்பத்தியில் இருக்கும் நடைமுறைச் சிக்கலை எளிதாக்கி, அதிக முளைப்புத்திறன், பயிா் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கருவியின் மூலம் தரமான, ஊட்டமேற்றப்பட்ட விதையை தேவையான ஊட்டச்சத்துகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்க முடியும்.

இந்த தொழில்நுட்பத்தால் அதிக மகசூல், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.