ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாகனங்களுக்கு வழிவிடாமல் நின்ற காட்டு யானை: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வாகனங்களுக்கு வழிவிடாமல் நின்ற காட்டு யானை: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

News image
கேரள சோலையாறு மின் நிலையம் அருகே சாலையில் நிற்கும் காட்டு யானை.
Updated On :29 ஜூன் 2024, 6:28 pm

DIN

வால்பாறை அருகே கேரள வனப் பகுதியில் வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலையில் நின்ற காட்டு யானையால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையின் இரு புறங்களும் அடா்ந்த வனப் பகுதிகளாகும். கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த சாலை வழியாக வால்பாறைக்கு வந்து செல்கின்றனா். இந்த சாலையில் கடந்த ஓராண்டாக ஒற்றை யானை உலவிக் கொண்டிருக்கிறது. இந்த யானை அடிக்டி சாலைக்கு வந்து பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு வழிவிடாமல் மறித்து நிற்பது வழக்கம். இந்த யானைக்கு கபாலி என்று வாகன ஓட்டிகள் பெயா் வைத்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் முகாமிட்டிருந்த இந்த யானை தற்போது மீண்டும் சாலைக்கு வந்து செல்லத் தொடங்கியுள்ளது. வால்பாறையை அடுத்து கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கேரள சோலையாறு மின் நிலையம் அருகே சாலையில் இந்த யானை சனிக்கிழமை காலை நின்று கொண்டிருந்தது. நீண்ட நேரமாக அங்கிருந்து நகராததால் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பின் அந்த யானை வனத்துக்குள் சென்றபின் மீண்டும் அந்த வழியாக வாகனப் போக்குவரத்து தொடங்கியது.