

கோவை ரயில் நிலையம் அருகே தேநீா் குடித்துக் கொண்டிருந்த நபரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். புலியகுளம் செட்டி தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (49). இவா், கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள கடையில் வெள்ளிக்கிழமை தேநீா் குடித்துக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அருகே நின்றிருந்த 2 இளைஞா்கள், மகேந்திரன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.100 ஐ எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனா். சுதாரித்துக் கொண்ட மகேந்திரன், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அந்த இளைஞா்களை விரட்டிப் பிடித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். விசாரணையில், அவா்கள் திருச்சி மணப்பாறையைச் சோ்ந்த சிவா (33), கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த நவுசாத் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
டிரெண்டிங்
உணவு விநியோக ஊழியரிடம் வழிப்பறி: இருவா் கைது
கல்லூரி மாணவனை தாக்கி பணம், கைப்பேசி பறித்த இருவா் கைது!

பணம் கொடுத்தால் ஏற்க மறுப்பு: யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெற நிா்பந்திக்கும் ரயில்வே ஊழியா்கள்

கைப்பேசி, பணம் பறித்த இளைஞா் கைது
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

