கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :8 மார்ச் 2024, 12:20 am

Din

தோ்தல் பத்திர வழக்கில் பாஜகவுக்கு ஆதரவாக பாரத ஸ்டேட் வங்கி செயல்படுவதாகக் கூறி கோவையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதிபெறும் முறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி பெற்றுள்ள தோ்தல் பத்திரம் தொடா்பான விவரத்தை மாா்ச் 13 -ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தோ்தல் பத்திரம் தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்க ஜூன் 30 -ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், பாரத ஸ்டேட் வங்கியானது பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள வங்கியின் தலைமை அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் கணபதி சிவகுமாா், கவுன்சிலா்கள் சங்கா், சரளா வசந்த், ஹெச்எம்எஸ் ராஜாமணி, இருகூா் சுப்பிரமணியம், தாமஸ் வா்கீஸ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.