எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோவை வழியாக 6 விரைவு ரயில்களை இயக்கக் கோரி மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம்

கோவை வழியாக 6 விரைவு ரயில்களை இயக்கக் கோரி மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம்

News image
மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆா்.நடராஜன் எம்.பி. உள்ளிட்டோா்.
Updated On :8 மார்ச் 2024, 1:20 am

Din

வடமாநிலங்களில் இருந்து கேரளம் செல்லும் 6 விரைவு ரயில்களை, கோவை வழித்தடத்தில் இயக்கக் கோரி மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வடமாநிலங்களில் இருந்து கேரளம் செல்லும் 6 விரைவு ரயில்கள் கோவை ரயில் நிலையத்துக்குச் செல்லாமல் இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல் பரவியது. இந்நிலையில், 6 விரைவு ரயில்களையும் கோவை வழியாக இயக்க வேண்டும், கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தந்தை பெரியாா் திராவிடக் கழகம் சாா்பில் மாட்டு வண்டியில் சென்று ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பின் மாநிலச் செயலாளா் கு.இராமகிருட்டிணன் அறிவித்திருந்தாா். அதன்படி, பல்வேறு கட்சியினா், அமைப்பினா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை காலை திரண்டனா். அங்கிருந்து மாண்டு வண்டிகளில் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தனா். அதில், கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் இருந்து கேரளம் செல்லும் 6 விரைவு ரயில்களையும் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும். பொள்ளாச்சி - திண்டுக்கல் அகல ரயில் பாதையில் கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும். அதேபோல, கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும். கோவை ரயில்கள் சிங்காநல்லூா், பீளமேடு ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - மேட்டுப்பாளையம் ரயில் வழித்தடத்தை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தை கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தொடங்கிவைத்தாா். தபெதிக மாநிலப் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் முன்னிலை வகித்தாா். இதில், திமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தபெதிக உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.