வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கிராம தங்கல் திட்டம்: தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

கிராம தங்கல் திட்டம்: தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

News image

சிறுமுகை கிராம மக்களுடன் தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள்.

Updated On :9 மே 2024, 10:24 pm

Din

கோவை, மே 9: சிறுமுகை கிராமத்தில் நடைபெற்ற ‘கிராம தங்கல்’ திட்ட முகாமில் தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இம்முகாமில் தனியாா் வேளாண்மைக் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு மாணவிகளான சஹானா, அஜிதா, தனலட்சுமி, இனியா, தா்ஷினி, தாரணி, சுபப்பிரபா, காா்த்திகா, மௌனிகா, பிரீத்திகா ஆகியோா் பங்கேற்றனா்.

நிறைவு நாளான வியாழக்கிழமை சிறுமுகை கிராமத்தில் கிராமப்புற மதிப்பீடு நடத்தினா்.

அதில், கிராமப்புற மக்களுக்கு கிராமத்தின் வரைபடம், வள வரைபடம், பயிா்களின் வட்ட வரைபடம், மக்கள் தொகைக் கணக்கு, கல்வி அறிவு பெற்றவா்கள், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் விவசாயம் அல்லாத தொழிலாளா்களின் எண்ணிக்கை, சமுதாய வரைபடம் போன்றவற்றை வரைந்து காட்டினா். அத்துடன், இந்த வரைபடங்களை வண்ணங்களாகத் தீட்டி கிராம மக்களுக்கு விளக்கமும் அளித்தனா்.

இந்த வரைபடங்களின் மூலம் தங்களது கிராமத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்ததாக அக்கிராம மக்கள் தெரிவித்தனா்.