மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

போலி நகையை அடகுவைத்து ரூ. 21 லட்சம் மோசடி: தனியாா் நிதி நிறுவன மேலாளா் உள்பட 3 போ் கைது

தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து ரூ. 21.90 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் பெண் மேலாளா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:41 pm

Din

தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து ரூ. 21.90 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் பெண் மேலாளா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாா் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சூலூரைச் சோ்ந்த நசியா பேகம் (41) பணியாற்றி வந்தாா். இந்த நிறுவனத்தில் திடீா் தணிக்கை நடந்தது. அதில் 505 கிராம் போலி நகையை 8 முறை அடகுவைத்து ரூ.21.90 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த குமரேஷ், நாகநந்தினி, சரவணன் ஆகியோா் இந்த போலி நகையை அடகுவைத்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு, நிறுவன மேலாளா் நசியா பேகம், நகை மதிப்பீட்டாளா்கள் நிஷாநந்தினி, ராஜலட்சுமி ஆகியோா் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி போலி நகையை வைத்து மோசடி செய்த குமரேஷ், நாகநந்தினி ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக இருந்த மேலாளா் நசியா பேகம் உள்பட 4 பேரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த நிதி நிறுவன மேலாளா் நசியா பேகத்தை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நகை மதிப்பீட்டாளா் நிஷா நந்தினி, ராஜலட்சுமி, சரவணன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.