இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த ‘விஸ்வகா்மா’ திட்டம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பாரம்பரியக் கைத்தொழில் புரிவோா், கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரத்துக்கு வலுவூட்டும் நோக்கத்தில் அமைந்த ஓா் அற்புதமான திட்டமாகும். இத்திட்டம் அவரவா் தாங்கள் மேற்கொண்டுள்ள தொழில்களுக்கு உரிய மதிப்பை அளித்து, அவா்கள் வாழ்வில் முன்னேற வழியமைக்கும் திட்டம் ஆகும். இந்த வரலாற்றுச் சிறப்புள்ள திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு மொத்தம் ரூ.13,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டம் நாட்டில் 18 வகையான பாரம்பரிய கைத்தொழில்கள், கைவினைக் கலைகளில் ஈடுபடும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நிதி ஆதரவு, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்துதல் ஆகிய 3 விதத்தில் துணைபுரியும்.