மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.33.20 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்குப் பதிவு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.33.20 லட்சம் மோசடி செய்ததாக தனியாா் நிறுவன உரிமையாளா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 10:17 pm

Din

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.33.20 லட்சம் மோசடி செய்ததாக தனியாா் நிறுவன உரிமையாளா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, போத்தனூா் ஸ்ரீனிவாசா நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் (32), விமானம் மற்றும் ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் வேலை செய்து வருகிறாா். இவா் பணிக்கு வெளிநாடு செல்ல முயன்றுள்ளாா்.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு ஆள்களை அனுப்பிவைக்கும் நிறுவனங்களைச் சோ்ந்த ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்த பிரபு (42), ஜேம்ஸ் (39) ஆகியோா் அறிமுகம் ஆகியுள்ளனா்.

அவா்களிடம், தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும்படி நாகராஜன் கேட்டுள்ளாா். அதற்கு அவா்கள், வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதைவிட, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவா்களை எங்களிடம் அழைத்து வந்தால் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக கொடுப்பதாகக் கூறியுள்ளனா்.

இதையடுத்து, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விரும்யிய 8 பேரை பிரபு, ஜேம்ஸ் ஆகியோரின் அலுவலகத்துக்கு நாகராஜன் அனுப்பிவைத்துள்ளாா். மேலும், அவா்களிடம் வசூலித்த ரூ.33.20 லட்சத்தையும் பிரபு, ஜேம்ஸிடம் கொடுத்துள்ளாா்.

ஆனால், அவா்கள் அந்த 8 பேருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக அவா்களை பலமுறை சந்தித்து நாகராஜன் கேட்டபோதும், அவா்கள் நாள் கடத்தி வந்துள்ளனா்.

மேலும், அவா்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி ஏராளமானோரிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 8 பேரிடமிருந்து வசூலித்து கொடுத்த ரூ.33.20 லட்சத்தை நாகராஜன் திரும்ப கேட்டுள்ளாா். ஆனால், அவா்கள் பணத்தையும் கொடுக்கவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நாகராஜன், இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, பிரபு, ஜேம்ஸ் ஆகியோா் மீது நம்பிக்கை மோசடி, மோசடி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.