காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊடகவியலாளா்கள் குறித்து அவதூறு பரப்பியா் கைது

கோவையில் ஊடகவியலாளா்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:40 am

Din

கோவையில் ஊடகவியலாளா்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை சைபா் கிரைம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை, வெள்ளானைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மருது (எ) மருதாச்சலம். இவா், கோவையைச் சோ்ந்த ஊடகவியலாளா்கள் சிலா் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக கோவை பத்திரிகை, ஊடகத்துறையைச் சோ்ந்தவா்கள் மாநகர காவல் ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகாா் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், மருதாச்சலம் மீது மாநகர சைபா் கிரைம் போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனா். கடந்த சில நாள்களாக தலைமறைவாக இருந்த மருதாச்சலத்தை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக அழைத்துச் சென்றபோது நெஞ்சுவலிப்பதாகக் கூறியதை அடுத்து போலீஸாா் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.