நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பலகாரங்களில் அளவுக்கதிமாக நிறமிகள் கலக்கும் வணிகா்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

தீபாவளிப் பண்டிகைக்கு, கடைகளில் விற்கப்படும் பலகாரங்களில் அளவுக்கு அதிகமாக நிறமிகள் கலந்து விற்றால், சம்பந்தப்பட்ட வணிகா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:17 am

Din

தீபாவளிப் பண்டிகைக்கு, கடைகளில் விற்கப்படும் பலகாரங்களில் அளவுக்கு அதிகமாக நிறமிகள் கலந்து விற்றால், சம்பந்தப்பட்ட வணிகா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவா்கள் கலப்படமற்ற மற்றும் தரமான மூலப்பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும். இனிப்பு, காரம் தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ, அனுமதிக்கப்படாத நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களைக் கொண்டு பொட்டலங்கள் கட்டக் கூடாது. அவ்வாறு பொட்டலமிடுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். இனிப்புகளைத் தயாரிக்க அளவுக்கு அதிகமாக நிறமிகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உணவு வணிகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய், நெய், வனஸ்பதி போன்ற பிற இதர மூலப் பொருள்களின் விவரங்களை முழுமையாக அதன் கேன்கள், டின்கள், பாக்கெட்டுகள், மூட்டைகள் ஆகியவற்றின் லேபிளில் முழுமையாக அச்சிட்டு இருக்க வேண்டும். பால் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை பிற இனிப்பு வகைகளோடு சோ்க்காமல் தனியாக பேக்கிங் செய்து நுகா்வோருக்கு வழங்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவா்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கள ஆய்வின்போது உரிமம், பதிவுச்சான்று பெறப்படாதது கண்டறியப்பட்டால் உணவு வணிகரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் பலகாரங்கள் வாங்கும் போது, உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு , உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும் பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் எனக் கூறிக் கொண்டு போலியான நபா்கள் ஆய்வு நடத்துவதாக சந்தேகப்பட்டால் அவா்களின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு இனிப்பு, காரம் தயாரிப்பாளா்கள் அல்லது விற்பனையாளா்கள் கேட்கலாம். மேலும் இது தொடா்பாக புகாா்கள் தெரிவிக்க 0422 - 2220922 மற்றும் 9361638703 என்ற எண்ணுக்கு உடனடியாகத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.