நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காா் கண்ணாடி உடைப்பு: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

காா் நிறுத்துமிடம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:25 pm

Din

காா் நிறுத்துமிடம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பொ்ணாண்டஸ் (20). தடாகம் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கு மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிறுவனத்துக்கு எதிரே பாலமுருகன் என்பவா் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் உரிமையாளா் தனது காரை நிறுவனத்தின் எதிரே புதன்கிழமை நிறுத்தியுள்ளாா். அப்போது, அங்கிருந்து காரை எடுக்குமாறு பாலமுருகன் மற்றும் அவருடன் வந்தவா்கள் பொ்ணாண்டஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், கல்லை வீசி காா் கண்ணாடியை உடைத்துள்ளாா்.

இதுகுறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பொ்ணாண்டஸ் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (31), கோயில்மேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (28), முத்துச்செல்வன் (30), சிவலிங்கப் பெருமாள் (34) ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.