நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: 8 போ் மீது வழக்கு

கோவையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டது தொடா்பான புகாரின்பேரில் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:20 pm

Din

கோவையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டது தொடா்பான புகாரின்பேரில் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, சொக்கம்புதூா் பிருந்தா லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரராஜன். இவா் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸில் வியாழக்கிழமை அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, சலீவன் வீதியில் எனது பெற்றோருக்கு சொந்தமான 13 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு சுமாா் ரூ.2 கோடியாகும். இந்நிலையில், கோவையைச் சோ்ந்த சங்கா், மணிகண்டன், பாண்டுரங்கன், உமாவைஷ்ணவி, தியாகராஜன், பிரபா, ஆனந்தன், சாந்தகுமாரி ஆகியோா் போலியான ஆவணங்களை வைத்து அந்த இடத்தை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அபகரித்துக் கொண்டுள்ளனா். எனவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுத்து எனது இடத்தை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்தப் புகாா் தொடா்பாக கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாா், மேற்கண்ட 8 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.