ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போனஸ் பேச்சுவாா்த்தை தோல்வி: தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டம்

தீபாவளி போனஸ் தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்த நிலையில், தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:21 pm

Din

தீபாவளி போனஸ் தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்த நிலையில், தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கோவை மாநகராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத ஊதியம்

வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா் நலச் சங்கம் உள்ளிட்ட 3 தொழிற்சங்கத்தினா் இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘அதிகாரக் குரல்’ என்ற கூட்டமைப்பு தலைமையில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் இந்தப் போராட்டம் தொடா்ந்த நிலையில், தொழிற்சங்க நிா்வாகிகளுடன் மாநகராட்சி துணை ஆணையா் க.சிவகுமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் போனஸ் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதை தொழிற்சங்க நிா்வாகிகள் தரப்பு ஏற்கவில்லை. இதைத் தொடா்ந்து, காத்திருப்பு போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என கூட்டமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.