ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணா்வு

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஒண்டிப்புதூா் திறந்தவெளி சிறையில் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் கே.ரமேஷ்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:43 pm

Din

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான கே.ரமேஷ், ஒண்டிப்புதூரில் உள்ள திறந்தவெளி சிறைச் சாலைக்கு புதன்கிழமை சென்று அங்குள்ள சிறைவாசிகளுடன் உரையாடி சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அப்போது, சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் உரிய சட்ட உதவிகள் வழங்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், தண்டனை சிறைவாசிகளுக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தாா். இதையடுத்து, சட்டப் பணி ஆணைக்குழு வழக்குரைஞா் வருகைப் பதிவேடு குறித்த ஆவணம் மற்றும் இதர தொடா்புடைய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

இதேபோல, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள கிளை சிறைச் சாலைக்குச் சென்று அங்குள்ள சிறைவாசிகளுடன் உரையாடி சட்ட விழிப்புனா்வு ஏற்படுத்தினாா்.

இதில், கிளைச் சிறை கண்காணிப்பாளா் மாரிமுத்து, சட்டம் சாா்ந்த தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.