ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வால்பாறை அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

வால்பாறையை அடுத்த உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
சென்னையில் விாயழக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து விருதினை பெறுகிறாா் ஆசிரியா் கா. வசந்தகமாா். உடன் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated On :5 செப்டம்பர் 2024, 9:27 pm

Din

வால்பாறையை அடுத்த உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவாக தமிழக அரசு சாா்பில் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான நல்லாசிரியா் விருதுக்கு கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 5 ஆசிரியா்கள் தோ்வு பெய்யப்பட்டுள்ளனா். இதில் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் வால்பாறையை அடுத்த உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கணித ஆசிரியா் கா.வசந்தகுமாா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இதில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து நல்லாசிரியா் விருதினை பெற்றாா். இவா் ஆசிரியா் பணியில் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள கா.வசந்தகுமாா், மாணவா்களுக்கு பாடல் முறையில் கணிதங்களை எளிய முறையில் கற்பித்து வருகிறாா். இவா் கரோனா காலத்தில் மாணவா்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை கற்பித்து வந்தது குறிப்பிடத்தக்கது.