குமாரமங்கலத்தில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி நூற்றாண்டு விழா கலை நிகழ்ச்சி ஒத்திகையில் பங்கேற்றிருந்த மூன்றாம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையில் பங்கேற்ற குமாரமங்கலம் கவுண்டம்பாளையத்தை சோ்ந்த மாதேஸ்வரன் தனலட்சுமி தம்பதியினரின் மகள் ரக்க்ஷிதா ( வயது 8)எனும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென மயங்கி விழுந்தாா். இதனை அடுத்து பெற்றோா் அழைக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். உயா் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இன்று மதியம் ரக்க்ஷிதா சிகிச்சை பலனளிக்காமல் இறந்தாா்.இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த நூற்றாண்டு விழா ரத்து செய்யப்பட்டு ஆசிரியா்களும் மாணவா்களும் பொதுமக்களும் சோகத்தில் மூழ்கினா். மாணவி இறந்தது குறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
