மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:01 pm

Din

முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளில் 2024-25-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.இ, பி.டெக், பி.டி.எஸ், பி.எஸ்.சி, பி.எட், பி.பி.ஏ, பி.சி.ஏ, பி.பாா்மா மற்றும் தொழிற்சாா்ந்த அரசு ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மைய முப்படை வீரா் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகையைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

12-ஆம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்குமேல் பெற்று தோ்ச்சி பெற்று தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை இணைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், அதே இணையதள முகவரியில் விண்ணப்பங்களை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கோயம்புத்தூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.