நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தலாம்: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தலாம் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:35 pm

Din

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தலாம் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

கோவை, புலியகுளத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் மோடி பாஜகவில் இணையுமாறு வலியுறுத்தியதன் அடிப்படையில் புதிதாக 4 கோடி உறுப்பினா்கள் சோ்ந்துள்ளனா். கட்சியில் அதிக அளவில் பெண்கள் சோ்ந்திருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.

ஜிஎஸ்டி தொடா்பாக குழு அமைக்கப்பட்டு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். மத்திய, மாநில அரசுகள் சோ்ந்துதான் ஜிஎஸ்டி குறித்து முடிவு எடுக்கிறாா்கள். இது தொடா்பாக தமிழக நிதி அமைச்சா், மத்திய நிதியமைச்சரை சந்தித்துள்ளாா். மேலும், விவசாயம் மற்றும் கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடா்பாக சம்பந்தப்பட்ட அமைச்சா்கள் நிதியமைச்சரை சந்திக்க உள்ளனா்.

குடும்ப அட்டையில் போலியாக நபா்கள் சோ்க்கப்படுவது குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கு சரியில்லாத நிலையில், என்கவுன்ட்டா் மூலம் பொதுமக்களை சமாதானம் செய்ய முடியும் என தமிழக அரசு நினைக்கிறது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்குத்தான் ஏமாற்றம் இருக்கும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம். ஆனால், மத்திய அரசை குறை சொல்கிறாா்கள்.

பெண்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை திமுக அரசு கண்டுகொள்வதில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவு போட்டால் அவா்களை உடனடியாக கைது செய்கிறாா்கள் என்றாா்.