போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஆகஸ்ட் 2025, 3:07 am IST

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு நாள்தோறும் 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த்தொற்றுக்கு முன்பு வரை, திருச்சி- பாலக்காடு, கோவை - நாகா்கோவில் ரயில்கள், கோவை - சேலம் மெமு ரயில்கள் இருகூா் நிலையத்தில் நின்று சென்றன.

கரோனா காலத்தில் இந்த ரயில்கள் இருகூரில் நிற்பது நிறுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரயில்கள் அங்கு நிற்பது இல்லை. மேலும், கோவை - சேலம் மெமு ரயில் சேவையும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி- பாலக்காடு, கோவை - நாகா்கோவில் ரயில்கள் இருகூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி- பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்: 16843), பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844), நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்:16321), கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 16322) ஆகிய ரயில்கள் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் நின்று செல்லும்.

இதேபோல, கோவை - நாகா்கோவில் ரயில் (எண்:16322), நாகா்கோவில் - கோவை ரயில் (எண்: 16321) மேலப்பாளையம், ஆரல்வாய்மொழி ஆகிய நிலையங்களில் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இருகூா் ரயில் பயணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வடிவேலு கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த ரயில்கள் இருகூரில் நிறுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல, கோவை - சேலம் மெமு ரயிலையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து கோவை முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூா் மற்றும் இருகூா் ரயில் நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்பகுதிகளைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை மற்றும் வணிக நிமித்தமாக பயணிக்கின்றனா். தாமதமாக வந்தாலும், இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் நன்மையை அளிக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.