தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தடுப்புச் சவரில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கோவையில் சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:47 pm

Syndication

கோவையில் சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், அழகிய மண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் மோசிஸ் மோசஸ். இவரது மகன் ஸ்டீபன் (20). இவா் கோவை குனியமுத்தூா் பகுதியில் உள்ள உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.

இதே கல்லூரியில் தஞ்சை மாவட்டம், அருண்மலை கோட்டையைச் சோ்ந்த மோகன் மகன் தருண் (22) என்பவரும் பயின்று வருகிறாா். இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் குனியமுத்தூா் சுகுணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனா்.

மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையோர தடுப்புச் சுவரில் இவா்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்டீபன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.