பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜனவரி 1 முதல் கேரள ரயில்கள் நேரம் மாற்றம்!

கேரள ரயில்கள் மற்றும் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் நேரம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 7:46 pm

Syndication

கேரள ரயில்கள் மற்றும் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் நேரம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாலக்காடு நிலையத்தில் இருந்து நாள்தோறும் காலை 8.45 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22651) ஜனவரி 1-ஆம் தேதி முதல் 8.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும்.

நாள்தோறும் 7.20 மணிக்கு பொள்ளாச்சி நிலையத்தைச் சென்றடையும் பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் (எண்: 16731) ஜனவரி 1 முதல் 7.40 மணிக்கு பொள்ளாச்சியை சென்றடையும். காலை 4.50 மணிக்கு பொள்ளாச்சி, 5.30 மணிக்கு கிணத்துக்கடவு நிலையத்தைச் சென்றடையும்.

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 16766) 5.20 மணிக்கு பொள்ளாச்சி, 5.50 மணிக்கு கிணத்துக்கடவு நிலையத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.