கோவை, வடகோவையில் உள்ள வனக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரூ. 8 கோடியில் அமைக்கப்பட்ட சாடிவயல் யானைகள் முகாம், பெத்திக்குட்டையில் ரூ. 19.50 கோடியில் கட்டப்பட்ட வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், ரூ. 2 கோடியில் வனத் துறை மின்னணு ஆவணக் காப்பகம் ஆகியவற்றை திறந்துவைத்த துணை முதல்வா், வனக் காவலா்களுக்கு 9 எம்.எம்.ஆட்டோ பிஸ்டல், பாயிண்ட் 315 ஸ்போா்டிங் ரைபிள்கள், தோட்டக்களை வழங்கினாா். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளைப் பாா்வையிட்டாா். பணியின்போது உயிா் நீத்த வனத் துறையினருக்கு துணை முதல்வா் அஞ்சலி செலுத்தினாா்.