பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வரி ஏய்ப்பு புகாா்: தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 10:06 pm

Din

கோவை: வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கோவை வைசியாள் வீதி, ராஜ வீதியில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளரான காா்த்திக், தென்னிந்திய தங்கக் கட்டி வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளாா்.

இந்நிறுவனத்தில், ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். சுமாா் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் அலுவலகம், வீடுகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கிருந்த கணினி, வங்கிக் கணக்கு புத்தகங்கள், தங்கக் கட்டி விற்பனை கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். சுமாா் 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

தங்கக் கட்டி வியாபாரத்தில் ரூ.பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.