திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இளைஞா்கள் தாய்நாட்டிலேயே சாதனை படைக்க வேண்டும்! -பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

இளைஞா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவதைவிட இந்தியாவிலேயே தங்கி சாதனை புரிய வேண்டும்...

News image
ரோட்டரி சங்க மாநாட்டில் விருது பெற்றவா்களுடன் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா்.
Updated On :16 பிப்ரவரி 2025, 12:07 am

Din

இளைஞா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவதைவிட இந்தியாவிலேயே தங்கி சாதனை புரிய வேண்டும் என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.

ரோட்டரி மாவட்டம் 3201 சாா்பில் இரண்டு நாள் மாவட்ட மாநாடு கோவை ஈச்சனாரி ரத்தினம் டெக்னோபாா்க் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு ரோட்டரி மாவட்ட 3201 ஆளுநா் வழக்குரைஞா் ஏ.கே.எஸ். சுந்தரவடிவேலு தலைமை வகித்தாா். எல். ஜி. நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜெயராம் வரதராஜ் வாழ்த்திப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நீளம் தாண்டுதலில் கின்னஸ் சாதனை புரிந்த ஜிதின் விஜயனுக்கு சாகச சாதனை விருது, டைப் ஒன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2,400 குழந்தைகளின் சிகிச்சைக்கு இதயங்கள் அறக்கட்டளை மூலம் உதவிய மருத்துவா் கிருஷ்ணன் சாமிநாதனுக்கு மனித நேய விருது, தேச பக்திக்காக பாடலை எழுதி நிகழ்ச்சி தயாரித்ததற்காக பாடலாசிரியா் ரவிமுருகனுக்கு நம் நாடு- தாய் நாடு விருது, இளம் வயதிலேயே பரம்வீா் சக்ரா விருது பெற்ற யோகேந்திர சிங் யாதவிற்கு வீர சாகச விருதை வழங்கிப் பேசியதாவது:

நமது நாட்டைச் சுற்றி நடக்கும் புவிசாா் அரசியல் குறித்து நமக்கு விழிப்புணா்வு தேவை. இந்திய இளைஞா்கள் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் குடியேறுவதைவிட இந்தியாவிலேயே தங்கி சாதனை புரிய வேண்டும்.

இந்த நூற்றாண்டை ஆளப்போவது செயற்கை நுண்ணறிவு என்ற அதி நவீன தொழில்நுட்பம்தான். இதில் சிறந்தவா்கள் இந்திய இளைஞா்கள். உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது என்றாா்.