ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கோவையில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி மீட்பு: மக்கள் நிம்மதி!

கோவையில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி மீட்கப்பட்டது பற்றி...

News image
விபத்துக்குள்ளான டேங்கர் லாரி.- Din
Updated On :3 ஜனவரி 2025, 5:56 am

DIN

கோவையில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அந்த லாரியை மீட்புக் குழுவினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.

கேரளம் மாநிலம், கொச்சியில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்ததில் சேதம் ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்த நிலையில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் அப்பகுதி கொண்டுவரப்பட்டது.

அந்த டேங்கரில் 18 மெட்ரிக் டன் எரிவாயு இருந்ததால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. மேலும், விபத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள 35 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு டேங்கர் லாரி மீட்கப்பட்டு, எரிவாயு கசிவை தீயணைப்புத் துறையினர் நிறுத்தியுள்ளனர். இந்த லாரியை மீட்பதற்காக சாலையின் நடுவே இருந்த 4 அடி திருவள்ளுவர் சிலை மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

திருச்சியில் இருந்து வரும் மீட்பு லாரி மூலம் டேங்கர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான லாரியை இருகூர் பகுதியில் உள்ள கேஸ் நிறுவன வளாகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.