பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய தக்காளிகள்

News image

விபத்துக்குள்ளான மினி லாரி.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:40 pm

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் சுமாா் 3 டன் தக்காளிகள் சாலையில் கொட்டி சேதமடைந்தன.

ஓசூரில் இருந்து திருநெல்வேலிக்கு தக்காளி ஏற்றிக்கொண்டு மினி லாரி சனிக்கிழமை இரவு புறப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (32) மினி லாரியை ஓட்டினாா். கிளீனராக கனகராஜ் (31) இருந்தாா்.

 சிதறிக் கிடக்கும் தக்காளிகள்.

சிதறிக் கிடக்கும் தக்காளிகள்.

தேசிய நான்குவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியைக் கடந்து நாலாட்டின்புதூா் மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா், கிளீனருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. லாரியில் இருந்த சுமாா் 3 டன் தக்காளிகள் சாலையில் கொட்டி சேதமடைந்தன.

விபத்து காரணமாக அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நாலாட்டின்புதூா் போலீஸாா், மாற்றுப்பாதையில் போக்குவரத்தை மாற்றிவிட்டனா். மேலும், மினி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா். இது குறித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.