கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொள்ளாச்சியில் ரயில் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் போராட்டம்

பொள்ளாச்சியில் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ரயில் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்.
Updated On :3 ஜனவரி 2025, 12:24 am

Din

பொள்ளாச்சியில் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு தினசரி காலை 7.25 மணிக்குப் பயணிகள் ரயில் புறப்படும். இந்த ரயில் வியாழக்கிழமை முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் தினசரி பொள்ளாச்சியில் இருந்து ரயில் மூலமாக கோவைக்கு செல்லும் பயணிகள் அதிருப்தி அடைந்தனா். பயண நேரத்தை எப்போதும்போல காலை 7.25 மணிக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி ரயில் முன் பயணிகள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதற்குப் பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து, ரயில்வே போலீஸாரும், பொள்ளாச்சி மேற்கு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.