நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொள்ளாச்சியில் ரயில் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் போராட்டம்

பொள்ளாச்சியில் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ரயில் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்.

Updated On :3 ஜனவரி 2025, 12:24 am

Din

பொள்ளாச்சியில் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரி பயணிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு தினசரி காலை 7.25 மணிக்குப் பயணிகள் ரயில் புறப்படும். இந்த ரயில் வியாழக்கிழமை முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் தினசரி பொள்ளாச்சியில் இருந்து ரயில் மூலமாக கோவைக்கு செல்லும் பயணிகள் அதிருப்தி அடைந்தனா். பயண நேரத்தை எப்போதும்போல காலை 7.25 மணிக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி ரயில் முன் பயணிகள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதற்குப் பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து, ரயில்வே போலீஸாரும், பொள்ளாச்சி மேற்கு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.