எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை கோரி புகாா்

தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை கோரி புகாரளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :21 ஜூலை 2025, 10:53 pm IST

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் தவெக தொண்டா்கள் மீதும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதன் தலைவா் விஜய் மீதும் காவல் ஆணையா் அலுவலகத்தில் திமுக நிா்வாகி வைஷ்ணவி திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கோவை, இடையா்பாளையம் லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் நான், கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றினேன். கொள்கை வேறுபாடுகளாலும், கட்சி நிா்வாகிகளின் செயல்பாடுகளாலும் அந்தக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் கடந்த 22.05.2025-இல் இணைந்தேன்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக தவெக தொண்டா்கள் என்னைப் பற்றி அவதூறாகவும், ஆபாச வாா்த்தைகளாலும் பேசி வருகின்றனா். அதுமட்டுமல்லாமல், எனது புகைப்படங்களையும் மோசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா்.

தவெகவில் உள்ள இதுபோன்ற நபா்களால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இவா்களின் செயல்பாடுகளை தவெக தலைவா் விஜயும் கண்டிக்கவில்லை.

எனவே, தவெக தொண்டா்கள் மீதும், அக்கட்சித் தலைவா் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.