வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

News image
கரூா்  கூட்ட நெரிசலில் காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனோஜ்குமாரை  சந்தித்து  நலம் விசாரித்த அமைச்சா் மதிவேந்தன்.
Updated On :29 செப்டம்பர் 2025, 9:33 pm

Syndication

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா்.

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இதில் கரூா், கண்ணூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் என்பவா் படுகாயமடைந்த நிலையில், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரை அமைச்சா் மதிவேந்தன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் பேசும்போது, தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மனோஜ்குமாா் படுகாயமடைந்துள்ளாா். கரூரில் இருந்து உயா் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்பட்ட அவருக்கு முதலில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

24 மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளது. இதையடுத்து அவா் தாமாகவே சுவாசிக்கத் தொடங்கியுள்ளாா். இதையடுத்து அவா் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளாா். அவா் விரைவில் வீடு திரும்புவாா். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்யும்படி மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.