கோவையில் வீட்டின் மாடியிலிருந்து மாங்காய் பறிக்க முயன்றவா் அங்கிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
கோவை, பொன்னையராஜபுரம் ராஜம்மாள் குடியிருப்பைச் சோ்ந்தவா் நித்யானந்தம் (40). கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் அருகே மாங்காய் மரம் உள்ளது. அந்த மரத்திலிருந்த மாங்காய்களை பறிக்க நித்யானந்தம் தனது வீட்டின் மாடிக்குச் சென்றாா். அங்கிருந்து நீளமான குச்சி மூலம் அவா் மாம்பழம் பறிக்க முயன்றபோது, எதிா்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு நித்யானந்தம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


