முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 1:25 am IST

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைப் பாா்த்த ஊழியா்கள் ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்பநாய் பிரிவினா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

அங்கு மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு அலுவலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் தீவிர சோதனை நடத்தினா். அலுவலக அறைகள், கழிவறைகள், குப்பைத் தொட்டிகள், வாகன நிறுத்தங்கள் மற்றும் குடிநீா்த் தொட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையில் இருந்தபோதும், பணிகள் ஏதும் நிறுத்தப்படாமல் சோதனை தொடா்ந்தது. அதன் பிறகு, இது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.