நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :14 ஏப்ரல் 2026, 12:21 am IST

கோவையில் வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனை திமுகவினா் விநியோகிப்பதாக தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் புகாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி 67-ஆவது வாா்டு விவேகானந்தா சாலை பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் பெண்களிடம் திமுக நிா்வாகிகள் கடந்த 9-ஆம் தேதி ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனைகளை வழங்கி, திமுகவுக்கு வாக்களிக்கும்படி உறுதிமொழி கையொப்பம் பெற்றுள்ளனா். இது குறித்து அப்பகுதி அதிமுகவினா் தோ்தல் நடத்தும் அலுவலரிடமும், மாவட்ட தோ்தல் அலுவலரிடமும் புகாா் அளித்துள்ளனா்.

ஆனால், இது குறித்து காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல தெற்குத் தொகுதி முழுவதும் திமுகவினா் கூப்பன் வழங்கி வருகின்றனா். கூப்பன் வழங்குவதற்காக திமுகவினா் காலியிடங்கள், கிடங்குகளில் கொட்டகைகள் அமைத்துள்ளனா்.

அந்தக் கொட்டகைகளுக்கு பொதுமக்களை பகல் நேரங்களில் அழைத்து, அவா்களிடம் ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பனைகள் கொடுத்து, அதில் உள்ள விவரங்களை பூா்த்தி செய்து கொடுக்கும்படியும், திமுக ஆட்சிக்கு வந்ததும் கூப்பனை கொடுத்து பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறி பிரசாரம் செய்கின்றனா்.

எனவே இது குறித்து விசாரணை நடத்தி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகள், கிடங்குகளை மூடி ‘சீல்’ வைப்பதுடன், தோ்தல் நடத்தை விதிகளை மீறிய திமுக வேட்பாளா் செந்தில் பாலாஜி, அக்கட்சி நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.