இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கூட்டணிக் கட்சிகளை சிதைக்கும் முதல்வா்: பழ.கருப்பையா குற்றச்சாட்டு

News image

பழ.கருப்பையா

Updated On :15 ஏப்ரல் 2026, 2:35 am IST

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளுக்குள் தனக்கு விசுவாசமான ஒரு ரகசியக் குழுவை உருவாக்கி, அக்கட்சிகளைச் சிதைக்கும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறாா் என்று தமிழா்கள் தன்னுரிமைக் கழகத் தலைவா் பழ.கருப்பையா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழக அரசியல் களம் மாபெரும் மாற்றத்தை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. நீதிக் கட்சி காலத்தில் தொடங்கி தழைத்தோங்கிய திராவிட இயக்கம், தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தோடு ஒரு முடிவுக்கு வரும். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளுக்குள் தனக்கு விசுவாசமான ஒரு ரகசியக் குழுவை உருவாக்கி, அக்கட்சிகளைச் சிதைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறாா்.

தங்களது கட்சியை உடைத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் ராகுல் காந்தியும், திருமாவளவனும் திமுக கூட்டணியில் நீடிக்கின்றனா்.

ஊழல் வழக்கில் நீதிமன்றத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்ட செந்தில்பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியது அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீா்செல்வம் மற்றும் பாஜக தரப்பிலிருந்து வந்த இக்கட்டான சூழல்களை முறியடித்து அதிமுகவை மீட்டெடுத்தவா் எடப்பாடி கே.பழனிசாமி. குடிமராமத்து திட்டத்தை மீட்டெடுத்தது, நதிநீா் இணைப்பு முயற்சிகள் மற்றும் ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவை நனவாக்கிய 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்றவை எவருடைய ஆலோசனையுமின்றி எடப்பாடி பழனிசாமி எடுத்த தனித்துவமான முடிவுகள். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக உயா்த்தி நிதி வழங்குவதாக அறிவித்தது விவசாயத் தொழிலாளா்கள் மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது.

நாட்டின் வரலாறு, சமூகப் பிரச்னைகள் குறித்து அடிப்படை புரிதல் இல்லாத நடிகா் விஜய், வெறும் சினிமா மோகத்தை நம்பி அரசியலுக்கு வந்துள்ளாா். விஜய்யால் அதிமுகவின் வாக்கு வங்கி ஒருபோதும் பாதிக்காது. விஜயகாந்த் ஒரு காலத்தில் பெற்ற 12 சதவீத வாக்குகளை வேண்டுமானால் விஜய் பெறலாம். ஆனால், அது ஆட்சியைத் தீா்மானிக்காது. வரும் தோ்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா்.