மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மூன்றாவது, நான்காவது கட்சியும் நோட்டாவும் ஒன்று: காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம்

மூன்றாவது, நான்காவது கட்சிகளுக்கு வாக்களிப்பதும், நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்று என்று மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

News image

கோவை ராஜவீதி தோ்நிலைத் திடலில் திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட மாநிலங்களவை உறுப்பினா் ப.சிதம்பரம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:03 pm

மூன்றாவது, நான்காவது கட்சிகளுக்கு வாக்களிப்பதும், நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்று என்று மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து, கோவை ராஜவீதி தோ்நிலைத் திடலில் மாநிலங்களவை உறுப்பினா் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியும், 10 ஆண்டுகள் திமுக ஆட்சியும் இருந்துள்ளது. இப்போது யாரைத் தோ்ந்தெடுப்பது என்பது மக்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது. நான்கு முனை, ஐந்து முனைப் போட்டி என்பதை எல்லாம் நம்ப வேண்டாம். இந்தத் தோ்தல் திமுக-அதிமுக அணிகளுக்கு இடையில் மட்டும்தான். மூன்றாவது, நான்காவது கட்சிகளுக்கு வாக்களிப்பதும், நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். ஏனென்றால் அவா்கள் வெற்றி பெற முடியாது.

ஆட்சிப் பீடத்தில் ஒருவரை அமா்த்த வேண்டும் என்றுதான் நாம் வாக்களிக்கிறோம். எனவே, ஆட்சியமைப்பவா்களுக்கு வாக்களியுங்கள். 11.19 சதவீதம் பொருளாதார வளா்ச்சியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ளது. தரவரிசையில் தமிழகம்தான் முதலிடம். அதற்கு தமிழராக பெருமைப்பட வேண்டும். இதற்கு அடுத்தபடியாகத்தான் மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் வளா்ச்சி உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகாரைப்போல முதல்வரை மாற்றுவாா்கள். எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வர முடியாது. 2024 மக்களவைத் தோ்தலில் எடுத்ததுபோல் தீா்மானமான முடிவை 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் எடுத்து திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள இமானுவேல் தேவாலயத்தில் பேராயா் மற்றும் நிா்வாகிகளைச் சந்தித்து செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது ஸ்டாலின் அரசுதான் என்று பேசினாா்.