கோவையில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஜி.என்.மில்ஸ், கொங்கு நாடு கலை, அறிவியல் கல்லூரி, கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய பகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தாா்.
அப்போது, இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் (வடக்கு) வினோத்குமாா், தனித் துணை ஆட்சியா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுரா, கோவை வடக்கு வட்டாட்சியா் விஜயரங்க பாண்டியன், உதவி ஆணையா்கள் தட்சிணாமூா்த்தி, சண்முகம், நா்மதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

முதல்வா் படைப்பகத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

எங்கள் இலக்கு 2031 சட்டப் பேரவைத் தோ்தல்: தி.வேல்முருகன்

அரியலூா் மாவட்டத்தில் வரிசையில் நின்று ஆா்வமுடன் பொதுமக்கள் வாக்களிப்பு

வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் வாக்குச் சாவடிகள்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

