ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் ரூ.17 லட்சத்து 93 ஆயிரத்து 460 ரொக்கம், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

பறிமுதல்!

Updated On :18 ஏப்ரல் 2026, 9:00 pm

கோவை மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் ரூ.17 லட்சத்து 93 ஆயிரத்து 460 ரொக்கம், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரையிலான சோதனையில், கிணத்துக்கடவு மற்றும் கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் ரொக்கப் பணம் சிக்கியுள்ளது.

கிணத்துக்கடவு தொகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் பறக்கும் படையினா் இணைந்து நடத்திய சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 270, கோவை தெற்குத் தொகுதியில் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி தொகுதியில் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம், வால்பாறை தொகுதியில் ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, வருமான வரித் துறையினா் மேற்கொண்ட சோதனையில் ஒரே இடத்தில் ரூ. 8 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, காவல் துறையினரால் 2 கிலோ போதைப் பொருள்களும், 22 லிட்டா் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் காவல் துறை மற்றும் வருமான வரித் துறை என பல்வேறு பிரிவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.